எதற்கு என்றே தெரியவில்லை, ஏன் என்றே தெரியவில்லை..
தானம் செய்யும் நான் சற்று யோசிக்க ஆரம்பித்த நாட்களாக மாறியது அந்த நாட்கள்... யாரும் வாட வேண்டாம் என்று நினைக்கும் நான் அந்த 10 நாட்கள் வாடியதை, வேதனை அடைந்ததை எண்ணி......
கம்பெனி எனகென்று கொடுக்கப்பட்ட தனி அறையில், யாரும் அறிமுகம் இல்லாத அந்த கோயம்புத்தூர் இல் போர்வைக்குள்ளே நான், 104 டிகிரி ஜுரத்தில், விடியற்காலை நேரத்தில் நடுங்கிய வலி எனக்கு மட்டுமே தெரியும்...
சில நேரம் ஜுரம் என்னை தூக்கி பிரட்டி போட்டது, உதவிக்கு அழைக்க நினைக்கும் நபர்க்கு மொழி பிரச்சனை, நான் அதிகம் மௌனம் ஆகா இருந்ததும் பிரச்சனை.. அடித்து புது ஒரு clinic சென்று, injection செய்தும் 2 நாட்கள் பலம் கொடுத்து காசுக்காக என்னை எமற்றினாரோ அந்த doctor, மறுமடியும் அதே நடுக்கம், ஜுரம் , காலை நேரம்.. நினைவுக்கு வரவில்லை என் நண்பர்களும், என் உயிர் தோழியும்... தாய் நினைத்து ஏங்கினேன்..
இது வரை இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது இல்லை, வெளி ஊரில், தனியே ஒரு வேளையில்... முடிந்த வரை எதற்கு சென்றேனோ அந்த வேலையை முடித்து, 1 நாள் விடுப்பில், ஊர் வந்த நேரும் முன்பே தாய்க்கு உண்மை சொனேன், இவ்ளோ நாட்கள் நான் கடும் சுரத்தில் இருந்தேன் என்று, அதிர்ந்த அவள் பதறும் முன்னே, அவள் முன் சேர்ந்தேன், அவளுக்கு தெரிந்த எல்லா கிளினிக்கும் அழைத்து சென்றால், அவள் கையில் உள்ள பணத்தை எல்லாம் செலவு செய்தால், 3 blood டெஸ்ட் செய்து, புரியவைத்தால் எனக்கு typhoid என்றும், அதற்க்கு முக்கியம் , மருந்தும் அவள் மனசும் என்று!!!
புரட்டி போட்ட ஜுரம் எனக்கு புரியவைத்த மற்றொன்று, முடிந்தவரை வெளியூர் சென்றால் அருகே இருக்கும் நபர் உடல் நலம் கெட்டால், முதலில் அவர்க்கு உதவ வேண்டும், நிச்சயம் அவருக்கும் மௌனம் பிடித்திருக்கலாம் முடியாத நிலையிலும்.
Saturday, February 19, 2011
Subscribe to:
Posts (Atom)